
பீகார் மாநிலம் பெகுசராயில் உள்ள ஜெயந்தி பெட்ரோல் பங்கில், மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய பரபரப்பான சம்பவம் சம்பவம் சனிக்கிழமை நடந்தது. பாலியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த பெட்ரோல் பங்கிற்கு இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
ரூ.200 மதிப்பில் பெட்ரோல் நிரப்பியபோது, பெட்ரோல் மீட்டர் ரூ.10-ல் தொடங்கியது என்ற காரணத்தால் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அதே இளைஞர்கள் மேலும் இருவருடன் ஆயுதங்களுடன் மீண்டும் வந்தனர்.
शनिवार को बिहार के बेगूसराय जिले में पुलिस के मुताबिक, दो युवक बाइक पर पेट्रोल भरवाने आए थे. उन्होंने पंपकर्मी से 54 रुपये का पेट्रोल मांगा, लेकिन बाद में विवाद करने लगे कि मीटर पहले से 10 रुपये पर था. इसी बहस के दौरान उनके साथियों ने फायरिंग कर दी और पेट्रोल पंप पर तोड़फोड़ कर… pic.twitter.com/uLIxQHKV0c
— AajTak (@aajtak) June 9, 2025
அவர்கள் பெட்ரோல் பங்க் ஊழியரை குச்சியால் தாக்கியதோடு, பிறகு துப்பாக்கியால் 5 முதல் 6 முறை சுட்டனர். பயந்த ஊழியர் ஒருவர் மேலாளரின் அறையில் தன்னை பூட்டி கொண்டு உயிர் காப்பாற்றிக் கொண்டார். இந்த தாக்குதலின் முழு காட்சிகள் பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவியில் தெளிவாக பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். நேஹா குமாரி தலைமையிலான போலீசார் மூன்று குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மோனு என்பவர் மீது ஏற்கனவே 9 குற்றவழக்குகள் இருப்பதுடன், சமீபத்தில் சிறையிலிருந்து ஜாமீனில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஏழு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.