சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டுமென பலர் அபாயகரமான செயலில் ஈடுபடுவது இன்றைய இளைஞர்களிடையே வழக்கமாகியுள்ளது. அந்த வகையில், ஓடும் ரயிலின் வாசலில் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற ஒரு இளைஞரின் மொபைல் கைபிடியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. வீடியோவில், அந்த இளைஞர் ரயிலில் பயணிக்கும்போது தன்னை ஸ்டைலாக படம் பிடிக்க முயல்கிறார். வீடியோவில், செல்ஃபி எடுக்கும் போதே, அவரது கைபிடியில் இருந்த மொபைல் திடீரென தவறி கீழே விழுந்தது.

இந்த வீடியோவை பலரும் பார்த்து கமெண்ட் செய்ய, “லைக்குகளுக்கான பசியால் தங்களையே காயப்படுத்திக் கொள்கிறார்கள்,” என சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “இந்த சம்பவத்துக்குப் பிறகு இவரும் வாழ்க்கையில் ஒருபோதும் ஸ்டைல் காட்ட மாட்டார்,” என சிலர் வேடிக்கையாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரயிலில் இத்தகைய செயலில் ஈடுபட வேண்டாம் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பொது அறிவுரையாக சமூக வலைதளங்களில் பரவுகிறது.