மகாராஷ்டிராவின் ஒரு கடையில் வாடிக்கையாளர் மற்றும் கடைக்காரர் இடையே ஏற்பட்ட மொழி விவாதம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாகியுள்ளதை தொடர்ந்து, மாநிலத்தில் மீண்டும் மொழி விவகாரம் தீவிரமடைந்துள்ளது. “மராத்தியில் பேசுங்க” என வாடிக்கையாளர் வலியுறுத்த, “நான் மாட்வாடி, மராத்தி தெரியாது” என கடைக்காரர் பதிலளித்தார். இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதம்  குறித்த வீடியோவுடன் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த சண்டையின் பின்னணியில், கடையில் சோப்புப்பொருட்களின் விலை மற்றும் தரம் குறித்த சச்சரவும் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர் “மராத்தி தெரியாதா? அப்படியானால் இந்த மாநிலத்தில் கடை எதற்காக?” என வாக்குவாதத்தில் கூறினார். இதனால் அப்பகுதியில் சிறிய குழப்பம் ஏற்பட்டது.

 

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் கருத்துகள் மோதலாகத் தோன்றியுள்ளன. சிலர் மராத்தி பேச வற்புறுத்திய வாடிக்கையாளரை கண்டித்து கருத்து தெரிவித்துள்ளனர், அதேபோல் மற்றவர்கள் “மொழி மரபை மதிப்பது அவசியம், ஆனால் கட்டாயப்படுத்துவது தவறு” என தெரிவிக்கின்றனர்.

மேலும் சமீப காலமாக மகாராஷ்டிராவில் மராத்தி மற்றும் ஹிந்தி மொழி பிரச்சனைகள் குறித்து சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வரும் நிலையில் அது குறித்த வீடியோக்களும் வைரலாகி வருகிறது. தற்போது இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.