
பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத் கைபர் பக்துன்வாயில் மாடர்ன் மாகாணம் என்ற பகுதியில் குடியிருப்புகள் அமைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென கியாஸ் சிலிண்டர் வெடித்தது.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் விபத்தில் பலியான 6 பேர் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.