உலகம் முழுவதும் 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நிலையில் பின்னர் படிப்படியாக குறைய தொடங்கியது. ஆனால் தற்போது மீண்டும் உலகின் பல நாடுகளில் கொரோனா பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் 3000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்திலும் 200-க்கும் அதிகமானோர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழந்தார். அதே நேரத்தில் கொரோனா பரவல் என்பது தீவிரமாக இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கர்ப்பிணி பெண்கள் மாஸ்க் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கட்டாயம் இல்லாவிடிலும் பாதுகாப்பிற்காக முக கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.