
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பாம்பு வீட்டிற்குள் நுழைந்து மேசை மின்விசிறியை சுற்றிக் கொள்கிறது. வீடியோவில் பாம்பு, மேசை விசிறியின் இறக்கைகளை சுற்றி சுருண்டு கிடக்கிறது. வீடியோ பதிவு செய்யும் நபரின் குரலும், பின்னணியில் பயந்தபடியும் ஆச்சரியமடைந்தபடியும் மக்கள் பேசும் குரலும் தெளிவாகக் கேட்கிறது.
View this post on Instagram
இது போன்ற அபாயகரமான சூழ்நிலையில் மக்கள் அதை அகற்றாமல், முதல் முறையாக பார்த்த அதிசயமாக வீடியோ எடுக்கிறார்கள் என்பதிலேயே சிலர் சிரிப்பும், சிலர் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
வீடியோவின் பின்னணியில் குழந்தைகளும் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களில் ஒருவர், “விசிறியின் குளிர்ச்சிக்காக வந்திருக்கும்” என நகைச்சுவையாகக் கூறியுள்ளார். மற்றொருவர், “பாம்பு மந்திர சக்தியால் விசிறியை இயக்க வர்றதா?” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
மேலும் சிலர், “இதை வீடியோ எடுக்காமல் உடனே பாதுகாப்பு மையத்தை அழைத்து நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான்” என கவலை தெரிவித்துள்ளனர். பாம்பு வீட்டிற்குள் நுழையும் இந்த வீடியோ நம்மை பாதுகாப்பு விழிப்புணர்வை மீண்டும் நினைவுபடுத்துகிறது.