
திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆணிடம் பழிவாங்கும் நோக்கத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண்ணின் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில், அந்த ஆணும், 30 வயதான அந்தப் பெண்ணும் சம்மதத்துடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் பின்னர், பெண்ணின் செயல்முறை மற்றும் கட்டாய திருமணத்திற்கான அழுத்தம் காரணமாக அந்த ஆண் திருமணத்தை மறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, பழிவாங்கும் நோக்கத்தில், பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்ததாக தெரியவந்தது.
சைபராபாத் போலீசில் 2022 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் தொடர்பான மனுவை எடுத்துக்கொண்ட நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர், அந்த வழக்கை சட்டத்தின் துஷ்பிரயோகமாக கருதி ரத்து செய்தனர். வழக்கை தொடர அனுமதிப்பது என்பது நீதிமன்ற நேரத்தையும், சட்டத்தைப் பயன்படுத்தும் முறையையும் தவறாக பயன்படுத்துவதாகும்” என்று நீதிபதி மேத்தா கூறினார்.
மேலும், அதே பெண் 2021-ஆம் ஆண்டிலும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர் ஒருவர்மீதும் இவ்வாறு புகார் அளித்திருந்ததாக தகவல் வெளியானது. இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக பெண்ணின் சமூக ஊடக அரட்டைகள் இருந்தன. ‘மஃபின்’ என்ற பெயரில் இருந்த சமூக ஊடக உரையாடல்களில், அவர் “கிரீன் கார்ட் வைத்த ஆண்களை சிக்க வைக்க வேண்டும்”.
“ஒரு இடத்தில் அடுத்த ஆணை சிக்க வைப்பது தனக்கு கடினமாக இருக்காது என்று அவர் சொன்னார். அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருடன் நேரத்தை வீணாக்க மாட்டேன் என்றும் ‘அடுத்த பாதிக்கப்பட்டவருக்காக முதலீடு செய்ய வேண்டும்’ என்றும் அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் தன்னை விட்டு வெளியேறும் அளவுக்கு துன்புறுத்துவதாகவும், அதனால் தான் மகிழ்ச்சியுடன் அடுத்த பாதிக்கப்பட்டவருடன் தொடங்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இது, புகார் முற்றிலும் சூழ்ச்சி செய்வதாக இருந்தது என்பதற்கான முக்கிய சாட்சியாக உச்சநீதிமன்றம் கருதியது. இதனைத் தொடர்ந்து, ஆணுக்கெதிராக இருந்த அனைத்து குற்றவியல் நடவடிக்கைகளும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது அவரை மீண்டும் அந்தவகை குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பதாகும்.
சமூகத்தில் ஆண்கள் மீது தவறான புகார்களை அடிக்கடி சுமத்தும் சிலருக்கு இது மிக முக்கியமான எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக சட்டவிரோத செயல்களுக்கு எதிராக சீர்திருத்தமான தீர்ப்பாகவும் பாராட்டப்படுகிறது.