
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூரில், நெடுஞ்சாலையில் ஏற்பட்ட ஒரு சிறிய அலட்சியமான செயல், ஒரு இளைஞரின் உயிரை பறித்தது.அவதில்லை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு விருந்தில் கலந்து கொண்ட ஜவுளி வியாபாரி ஜாக்கி கெஹி (31) என்பவர், நண்பர்களான ஆகாஷ் சந்தானி மற்றும் பங்கஜ் சாப்ராவுடன் காரில் பிலாஸ்பூரில் இருந்து ராய்ப்பூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, காரை ஓட்டிக்கொண்டிருந்த ஆகாஷ், மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் செல்லும் நிலையில், குட்கா துப்புவதற்காக கதவைத் திறந்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த தடுப்பு சுவர் மீது வேகமாக மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் கார் கவிழ்ந்து பல இடங்களில் மோதியதால் கடுமையான தாக்கத்தால், காரில் இருந்த மூவரும் வெளியே தூக்கி வீசப்பட்டனர். ஜாக்கி சாலையோரத்தில் இருந்த உலோக அமைப்பில் மோதியதால், மார்பு, தலை மற்றும் தோள்களில் கடுமையான காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் ஆகாஷ் மற்றும் பங்கஜ் படுகாயங்களுடன் கீழே விழுந்தனர். கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வணிக வாகனத்தில் மோதியதும், பல முறை கவிழ்ந்து, இறுதியில் ஒரு எர்டிகா காரில் மோதியது. அந்த வாகனத்தின் ஓட்டுநரும் காயமடைந்தார்.
இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனடியாக காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இடிபாடுகள் அகற்றப்பட்டபின், பாதிக்கப்பட்ட பகுதியில் போக்குவரத்து மறுபடியும் இயல்பான நிலையில் வந்தது.
சஹார் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, ஓட்டுநரின் அலட்சியமான நடவடிக்கையின் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், போக்குவரத்து விதிகளை மதிக்காமல் நடப்பது மற்றும் ஓட்டுநர்களின் அலட்சியத்தால் ஏற்படும் விபரீதம் குறித்து எடுத்துக்காட்டுவதாக உள்ளது.