
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 8-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் குறைந்த மதிப்பெண் மற்றும் தேர்ச்சி அடையாத மாணவர்கள் விடைத்தாள் நகல் வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தற்போது அரசு தேர்வுகள் துறை விடைத்தாள் நகல்களை இன்று மதியத்திற்கு மேல் பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
அதன்படி விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த இணையதள முகவரியில் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்த பிறகு மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் இதே இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் ஜூன் 5-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரையில் மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஆவணங்களை பூர்த்தி செய்து நாளை காலை 11:00 மணி முதல் வருகிற சனிக்கிழமை மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட அரசு மாவட்ட தேர்வுகள் உதவித்துறை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மதியத்திற்கு மேல் விடைத்தாள் நகல்கள் வெளியாவதால் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாமதிக்காமல் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.