
தமிழ்நாடு அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தி நேர கட்டுப்பாடு விதித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தி நேரக் கட்டுப்பாடு விதித்தது செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் ஆன்லைன் விளையாட்டுகளால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் என்பது அரங்கேறி வரும் நிலையில் அதனை தடுக்கும் நோக்கத்தில் தமிழக அரசு கட்டுப்பாட்டினை அமல்படுத்திய நிலையில் தற்போது தமிழக அரசுக்கு சாதகமாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.