
ஜெர்மனியில் உள்ள எர்புருட் நகருக்கு அருகே உள்ள பகுதியில் இருந்து முசென்கல்பச்ட் விமான நிலையத்திற்கு நேற்றுக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தை 71 வயதான மூதாட்டி ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார். நெதர்லாந்து எல்லை அருகே கொர்சன்பரிச் பகுதியில் விமானம் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து அந்த விமானம் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானம் தீ பற்றி எரியத் தொடங்கியது. இந்த சம்பவத்தில் விமானியான மூதாட்டி மற்றும் விபத்துக்குள்ளான வீட்டிலிருந்த நபர் என மொத்தம் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.