
தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரச்சார பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா புஸ்ஸி ஆனந்துடன் கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது அண்ணாமலையாவது 10 பேரை வச்சிக்கிட்டு 18 சதவீதம் ஓட்டு வாங்கிட்டார். ஆனால் எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வரவில்லை என்று ஒருமையில் பேசினார்.
இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆதவ் அர்ஜுனா நான் பேசிய கருத்துக்காக மன்னிப்பு கேட்டார். அதற்குப் பின்புறம் நடிகர் விஜய் இருப்பதாக கூறப்பட்டது. அதாவது எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் விஜய் போன் போட்டு ஆதவ் பேசியதற்கு வருத்தம் தெரிவித்ததாகவும் அதன் பிறகு தான் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமிடம் நடிகர் விஜய் போன் போட்டாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் எப்படி எதுவும் இல்லை என்று கூறினார். மேலும் திமுக ஆட்சியில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.