
ஜப்பானின் டோக்கியோவிலிருந்து அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரம் நோக்கிப் புறப்பட்ட ANA விமானத்தில் (விமான எண் 114) ஒரு பயணி செய்த காரியத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விமானம் பறந்து கொண்டிருந்த போது, ஒரு பயணி திடீரென விமானத்தின் வெளியேறும் கதவுகளை திறக்க முயன்றார். இது பயணிகளிடமும் விமான ஊழியர்களிடமும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. உடனே மற்ற பயணிகளும் ஊழியர்களும் சேர்ந்து அந்த நபரை தடுத்து நிறுத்தினார்கள். விமானம் சுமார் 10 மணி நேரம் பறந்தபின், அவசரமாக அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் தரையிறக்கப்பட்டது.

அந்த நபர் தரையிறங்கியதும் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மேலும், அதே விமானத்தில் மற்றொரு பயணியும் விமான நிலையத்தில் வித்தியாசமான முறையில் நடந்துகொண்டதால், அவரையும் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டது. பின்னர் விமானம் மீண்டும் ஹூஸ்டன் நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதும் முக்கிய தகவல்.
இந்த சம்பவம் குறித்து FBI மற்றும் விமானத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானங்களில் பயணிக்கும் போது பயணிகள் ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும் என்பதே எல்லோருடைய வேண்டுகோள். இந்த மாதிரியான ஒழுங்கின்மை, விமானத்தின் பாதுகாப்பையும் பயணிகளின் உயிரையும் ஆபத்தில் ஆழ்த்தும். கடந்த சில ஆண்டுகளில் இப்படி கதவைத் திறக்க முயலும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்கிடமானதாகும்