
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்சி நகரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை, ஒரு மனைவி தனது கணவரை அவரது காதலியுடன் இருப்பதைக் கண்டு எதிர்ப்பு தெரிவித்ததற்காக அவர் தாக்கப்பட்டார். இது சிவாஜி நகர் சந்தை பகுதியில் நடந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், சிவம் யாதவ் என்ற நபரும், அவரது காதலியும், மனைவி மோகினியை சாலையின் நடுவில் அடித்து, இழுத்துச் செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது.
மோகினியின் கூற்றுப்படி, “நான் அன்றைய தினம் மருந்து வாங்க வந்திருந்தேன். அப்போது தான் என் கணவரையும், ஒரு பெண்ணையும் ஒன்றாக பார்த்தேன். நான் இதுபற்றி கேட்டபோது வாக்குவாதம் முற்றியதால், அவள் என்னை அடிக்கத் தொடங்கினாள்; பிறகு என் கணவரும் சேர்ந்து அடித்தார்,” என கூறியுள்ளார். அதே நேரத்தில், ஒருவர் இந்த சம்பவத்தை கைபேசி கேமராவில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், மோகினியின் தலைமுடியை பிடித்து இழுக்கப்பட்டதும், அவள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் தெளிவாக காணப்படுகிறது.
Extra-Marital affair Kalesh (Wife Caught her Husband With some other Girl on Road) Jhansi UP pic.twitter.com/TyROKwQYpT
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 24, 2025
சம்பவ இடத்தில் பொதுமக்கள் கூடியிருந்தாலும், யாரும் மோதலை நிறுத்த முன்வரவில்லை. பின்னர், சிவம் மற்றும் அவரது காதலி இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். காயமடைந்த மோகினி, அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சிவம் மற்றும் அவரது காதலிக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என ஜான்சி போலீசார் தெரிவித்தனர். வீடியோ ஆதாரங்களும், சாட்சிகளின் மூலம் குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.