வேலூர் மாவட்டம் குடியாத்தம் பெரியார் நகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்மு குட்டி(50). இவர்களது மகன் செல்வ சூர்யா(29) கார் டிரைவராக வேலை பார்க்கிறார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அம்மு குட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வ சூர்யா யாரிடமும் பேசாமல் தனியாகவே இருந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் செல்வசூரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூர்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.