
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அவந்திப்போரா உபமண்டலத்தில் உள்ள ட்ரால் பகுதியில் கடந்த மே 14ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான மோதலில் மூன்று பயங்கரவாதிகள் பலியாகினர். இந்த மோதலின் போது எடுக்கப்பட்ட டிரோன் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில், ஒரு பயங்கரவாதி தூண் பின்னால் மறைந்திருப்பது மற்றும் அவரிடம் துப்பாக்கி உள்ளதுபோன்ற காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. மற்றொரு வீடியோவில், இடிந்த குடிசையில் சில பயங்கரவாதிகள் ஒளிந்திருப்பதும் தெரிய வருகிறது.
தெற்கு காஷ்மீரின் அவந்திப்போரா பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக உறுதியான உளவு தகவல் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்புப் படைகள் அந்த பகுதியில் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர். அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தொடங்கினார்கள். அதற்குப் பதிலடியாக பாதுகாப்புப் படைகள், மேற்கொண்ட நடவடிக்கையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் ஜெய்ஷ்-ஈ-முகம்மது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மூவரும் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிப் அகமத் ஷேக், அமீர் நசீர் வானி மற்றும் யாவர் அகமத் பட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
BIG WIN in Tral Encounter:
Drone footage of encounter
Massive success for J&K Police, Indian Army & intel units.
Stay tuned for more updates #TralEncounter #Kashmir #JeM #IndianArmy #JKPolice #CounterTerrorism #IndiaFightsTerror #BreakingNews #NationalSecurity #FollowForUpdates pic.twitter.com/4e7g3vmbFj— Anuvesh Rath (@AnuveshRath) May 15, 2025
இதற்கு முன் மே 13ம் தேதி ஷோபியான் மாவட்டத்தில் உள்ள கெல்லர் பகுதியில், பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட வேறு ஒரு நடவடிக்கையில் லஷ்கர்-ஈ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். இது 48 மணி நேரத்துக்குள் காஷ்மீரில் நடந்த இரண்டாவது சம்பவமாகும். அன்றைய தினம், காடுகள் சூழ்ந்த ஷோபியான் பகுதியில் தீவிரமாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது, பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படைகள் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் தீவிரவாதிகளின் திட்டங்களும் அதில் முறியடிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்டவை. மே 15ம் தேதி, சர்வதேச உளவு அமைப்பின் முக்கிய தகவலின் அடிப்படையில் இந்திய இராணுவம், ஜம்மு-காஷ்மீர் போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் இணைந்து அவந்திப்போரா-ட்ரால் பகுதியில் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் பதிவாகியது. இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)’ எனும் அமைப்பு.
பாதுகாப்பு படைகள் தீவிரவாதிகளின் இயக்கங்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றன. மேலும் உளவுத்துறை தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள், தீவிரவாதத் திட்டங்களை முறியடிக்க முக்கிய பங்காற்றி வருகின்றன.