சென்னை மாவட்டம் புழல் சிவராஜ் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கிஷோர்(24). ஆட்டோ ஓட்டுனர். இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கிஷோர் தனது தாய், பாட்டி சரஸ்வதி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள கோவில் திருவிழாவிற்கு சென்ற சரஸ்வதி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

நேற்று முன்தினம் தனது வீட்டில் கிஷோர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் இடத்திற்கு சென்று கிஷோரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அவரது வீட்டிற்கு அருகிலேயே முட்புதரில் துர்நாற்றம் வீசியதால் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில் சரஸ்வதியின் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் காணாமல் போன சரஸ்வதி வீட்டிற்கு அருகே இறந்து கிடந்தது எப்படி? கிஷோர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.