பெரம்பலூர் அருகே ஆற்றில் மின்சாரத்தை பாய்ச்சி மீன் பிடிக்க முயன்ற இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தொண்டைமாந்துறையில் காட்டாற்றின் அருகே சட்டவிரோதமாக மின்கம்பத்தில் இருந்து ஒயரை இணைத்து தண்ணீரில் போட்டு வாலிபர்கள் இருவரும் மீன் பிடித்துள்ளனர்.

அப்போது மின்சாரம் பாய்ந்து ரஞ்சித் (30), தினேஷ் (28) ஆகிய இரு வாலிபர்களும் உயிரிழந்தனர். இந்த பகுதியில் சட்டவிரோதமாக பலர் மீன்பிடிப்பதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.