மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 லீக் போட்டியின் போது, இரண்டாவது ஓவரில் ரோஹித் சர்மா லெக் ஸ்டம்ப் முன்பாக ஃபஸல்ஹக் பாரூக்கியின் பந்தில் சிக்கினார். அப்போது நடுவரின் விரல் உயர்ந்தது, ஆனால் அதற்குப் பின்னர் நடந்த டிஆர்எஸ் முடிவு தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

தொடக்கத்தில் ரோஹித் டிஆர்எஸ் கேட்பதிலே தயக்கம் காட்டினார். அதாவது  டிஆர்எஸ்க்கான 15 விநாடி கவுன்ட்டவுன் முடிந்த பிறகு அவர் குறிப்பிட்டதுபோல, சரியாக நேரத்திற்குள் அவர் டிஆர்எஸ் சைகை செய்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நேரம்  கடந்துவிட்டது போலவும், சற்று முன்பே சைகை செய்ததாகவும் சிலர் காணொளியை வைத்து வாதாடினர். இருப்பினும், மேல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், பந்து லெக் ஸ்டம்ப் வெளியே பவுண்ஸ் ஆனது உறுதி செய்யப்பட்டது. இதனால் ரோஹித் அவுட் எனத் தீர்மானித்த முடிவு மாற்றப்பட்டது. ரோஹித் முகத்தில் நிம்மதியும் புன்னகையும் தெரிவதாக காட்சியில் தெரிந்தது.

 

ஆனால், இந்த முடிவு சமூக வலைதளங்களில் கடும் விவாதத்திற்கு இடமளித்துள்ளது. “15 விநாடிக்கு பிறகுதான் டிஆர்எஸ் சைகை செய்தார்” என பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். டிஆர்எஸ் விதிகளின்படி, நடுவரின் முடிவுக்குப் பின்னர் 15 விநாடிக்குள் மட்டுமே அணி விமர்சனம் கோர முடியும். இது போல் நேர எல்லையை மீறும் அபாயகரமான தீர்வுகள் விளையாட்டு நியாயத்தைக் கேள்விக்குள்ளாக்கும் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதில் IPL நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.