இந்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி, இந்திய சாலைகளில் கேட்கும் கூச்சலான ஹார்ன் சத்தங்களை இனிமையான இந்திய இசைக்கருவி ஒலிகளாக மாற்றும் புதிய சட்டம் கொண்டுவரும் திட்டத்தில் இருப்பதாக அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நவ்பாரத் டைம்ஸ் 78வது ஆண்டு விழாவில் பேசிய அவர், “அனைத்து வாகனங்களிலும் இனிமையான ஒலி வரும் வகையில் ஹார்ன்கள் இருக்க வேண்டும்.

டப்லா, புல்லாங்குழல், ஹார்மோனியம், வயலின் போன்ற இசை ஒலியோடு இருக்கும் ஹார்ன் ஒலிகள் சாலையோரம் மன நிம்மதியுடன் பரவ வேண்டும்,” என தெரிவித்தார். மேலும், போக்குவரத்து துறை தான் நாட்டின் காற்று மாசுபாட்டில் 40% வரை பங்கு வகிக்கிறது என்றும், இதை குறைப்பதற்காக எத்தனையோ திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

அதற்காக எத்தனால், மெத்தனால், பைஓ-எனர்ஜி போன்ற பசுமை எரிபொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த புதுவிதமான யோசனை குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சில இந்த புது முயற்சி மன அழுத்தம் குறைக்கும் நம்பிக்கை ஊட்டும் புது சிந்தனையாக இருக்கலாம் என பாராட்டியும் வருகின்றனர்.