
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பகேலா கிராமத்தில் அனுஜ் சர்மா என்ற 30 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு பிங்கி என்ற 26 வயது பெண்ணுடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இதில் பிங்கி வேறொரு ஆணுடன் உறவில் இருந்ததால் அனுஜ் அவருடன் பேசக்கூடாது என்று தன் மனைவியிடம் கூறியுள்ளார்.ஆனால் அதனை பொருட்படுத்தாத பிங்கி தொடர்ந்து தன் நான் நண்பருடன் பேசினார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தன் கணவனை தீர்த்து கட்ட பிங்கி முடிவு செய்தார்.
இதற்காக கடந்த 25 ஆம் தேதி தன் கணவனுக்கு காபியில் விஷம் கலந்து பிங்கி கொடுத்தார். இதில் அவருடைய உடல்நிலை மோசமான நிலையில் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அனுஜின் சகோதரி கொடுத்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு தலைமறைவாக உள்ள அவரின் மனைவியை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் வேறொரு நபருடன் பிங்க்கிக்கு தொடர்பு இருந்த போதிலும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.