
பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை நீலாங்கரையில் இருக்கும் பாரதிராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இரவு முதலே திரைத்துறையைச் சேர்ந்த ஏராளமானோர் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சராக மு.க ஸ்டாலின் நேரில் சென்று மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பின்னர் பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறினார். இதனையடுத்து துணை முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரும் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இன்று மாலை 4:30 மணிக்கு மனோஜின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.