
நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள பிசிசி அலுவலகத்தில் கேப்டன்களோடு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அணிகளின் மேலாளர்களும் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் ஐபிஎல் விதிமுறைகள் குறித்தும், பந்தில் எச்சிலை தேய்க்கக்கூடாது என்ற விதிமுறை நீக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது., பந்தின் மீது எச்சிலை வைத்து தேய்க்கும் போது ஒருபுறம் லேசாக தேய்ந்து போகும். அப்போது பந்து நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். கொரோனாவின் போது எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்று விதிக்கப்பட்ட தடையால்,ரிவர்ஸ் ஸ்விங் அழிந்த நிலையில் தான் இதை செய்வதில் மனனான முகம்மது ஷபி இந்த கோரிக்கையை வைத்திருந்தார். இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடருக்காக இந்த தடையை பிசிசிஐ நீக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு புதிய விதிமுறையை மாற்றி அமைத்துள்ளது. அதாவது கடந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியா நிர்வகிக்கப்பட்ட நேரத்திற்குள் பவுலிங் செய்து முடிக்கவில்லை. இதனால் அவருக்கு 35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதோடு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டிற்கான ஐபிஎல் போட்டிகளில் காலதாமதமாக பந்து வீசினால் அபராதம் மற்றும் தடை விதிக்கப்படாது என்றும் அதற்கு பதிலாக புள்ளிகள் குறைக்கப்படும் என்றும் இந்த விதிமுறை 2027 ஆம் வருடம் வரை தொடரும் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.