
இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வரும் தெற்கு ரயில்வேயின் மிகப்பெரிய ரயில்வே கோட்டங்களில் ஒன்று மதுரை ரயில்வே பிரிவு. இதன் தலைமையிடம் மதுரையில் உள்ளது. இந்த நிலையில் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 13 AC ரயில் பெட்டிகளில் பொதுமக்களுக்கு சௌகரியமாக இருப்பதற்காக போர்வை- தலையணை வழங்கப்படுகிறது.
இந்த போர்வை-தலையணை கவர்களில் முன்னதாக 3 வகுப்புகள் கொண்ட AC ரயில் பெட்டிகளில் 2 மொழிகள் மட்டுமே எழுதப்பட்டிருக்கும். ஆனால் மதுரை ரயில்வே கோட்டம் தற்போது பொதுமக்களுக்கு கொடுக்கப்படும் போர்வை- தலையணை கவர்களில் தமிழ் உள்பட மும்மொழிகள் இருக்க வேண்டும் என ஒப்பந்த நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.