
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி சாம்பியன் டிராபி போட்டி கடந்த மார்ச் 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியின் போது விளையாட்டு வீரர் ஷமி ஒரு பாட்டிலில் உள்ள பானத்தை குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவிற்கு இஸ்லாமிய மதகுரு ஒருவர்,”ஷரியத்தின் பார்வையில் அவர் ஒரு குற்றவாளி. அவர் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இல்லாமல் இதை செய்துள்ளார்” என குற்றம் சாட்டியிருந்தார்.
கிரிக்கெட் விளையாடுவது மோசமானது அல்ல. ஆனால் முகமது ஷமி தனது மத பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் மேலும் அறிவுறுத்தி இருந்தார். இதேபோன்று தற்போது ரம்ஜான் மாதத்தில் முகமது ஷமியின் மகளின் ஹோலி கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு அதே இஸ்லாமிய மதகுரு “இவை ஷரியத்துக்கு எதிரானது” என தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு இந்த வீடியோவிற்கு அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் ஷாஹாபுதீன் ரஸ்வி கூறியதாவது, “அவள் ஒரு சிறிய பெண்மணி அவள் அதை புரிந்து கொள்ளாமல் ஹோலி விளையாடியுள்ளார். அது குற்றமல்ல” என ஆதரவாக கூறியிருந்தார். மேலும் தங்களது மகள் புரிந்து கொள்ளும் நிலையில் இருந்தால் அது ஷரீயத்துக்கு எதிரானதாக கருதப்படும் என்பதை அவருக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும், கிரிக்கெட் வீரர் ஷமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என ரஸ்வி தெரிவித்துள்ளார்.