
இன்றைய காலகட்டத்தில் பெருமளவில் மோசடிகள் அரங்கேறி வருகிறது. பலருடைய தனிப்பட்ட தகவல்களும் ஹேக் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு என்றாலே பலருக்கும் ஆப்பிள் சாதனங்கள் தான் நினைவிருக்கும். ஏனென்றால் அவ்வளவு எளிதாக யாராலும் ஐபோன் மற்றும் ஆப்பிள் கணினி, டேப்களை ஹேக் செய்ய முடியாது. அதனால் தான் பலரும் அதிக விலை இருந்தாலும் ஆப்பிள் ஐபோன் மற்றும் கணினிகளை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஆப்பிள் தரப்பிலிருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது அமெரிக்காவின் புகழ் பெற்ற தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள் தன்னுடைய பயனாளர்களின் ஐபோன்களையும் ஐ பேடுகளையும் உடனடியாக அப்டேட் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும் பல்வேறு ஆப்பிள் இயங்கு தளங்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழுவானது எச்சரிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் iPadOS, macOS, Vision OS மற்றும் Safari-ன் பழைய வெர்ஷன்களில் இயங்கும் சாதனங்களை எளிதாக சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதன் காரணமாக பயனாளர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளுமாறு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.