குஜராத்தில் கிர் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. அங்கு தேசிய வனவிலங்கு வாரியத்தின் சார்பில் 7 வது ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்தக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். அங்கு கலந்து கொண்ட பிரதமர் மோடி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது. இந்திய நதிகளில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி சுமார் 8,500 கிலோ மீட்டர் பகுதியில் ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் 8 மாநிலங்களை சேர்ந்த 28 நதிகளில் 6327 டால்பின்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் டால்பின்கள் அதிக அளவு இருப்பது தெரிய வந்துள்ளது. இதேபோன்று மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களிலும் டால்பின்கள் அதிகளவு இருக்கிறது. எனவே டால்பின்களை பாதுகாப்பது மற்றும் அது குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் எடுத்து கூறுவது அவசியம். மேலும் டால்பின்களின் வாழ்விடப் பகுதிகளுக்கு பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்று காட்ட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.