ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி நடந்த ஒரு விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாலை 5 மணி அளவில் சாலையில் ஒரு கனரக லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி சென்று கொண்டிருக்கும்போதே திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது லாரி கவிழ்ந்து விழுந்தது.

இந்த பயங்கர விபத்தில் பைக்கில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவரின் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.