அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இரண்டாவதாக ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப் பதவியேற்ற நாள் முதல் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அரசு துறைகளில் பணியாளர்கள் குறைப்பு. ஏற்கனவே லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை 89 மாத ஊதியத்துடன் ராஜினாமா செய்து கொள்ள டிரம்ப் அறிவுறுத்தி இருந்தார். இந்த அரசு பணியாளர்கள் நீக்கம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தானாகவே முன்வந்து ராஜினாமா செய்து கொள்ளும் ஊழியர்கள்  8 மாத ஊதியத்துடன் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் 1600 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக அமெரிக்க நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் பணிபுரியும் 4500 க்கும் மேற்பட்ட சர்வதேச மேம்பாட்டு நிறுவன ஊழியர்களை ஊதியத்துடன் பணி நீக்கம் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கான சில ஊழியர்களை தவிர்த்து மற்ற அனைவரையும் பணியிடைநீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிரம்ப் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் செலவினங்களை குறைத்து அரசின் செயல் திறனை மேம்படுத்த டி.ஓ.ஜி.இ என்ற துறையை உருவாக்கியுள்ளார். இந்தத் துறையின் தலைவராக முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.