குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜ்கோட் பகுதியில் பாயல் மகப்பேறு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு தனியாக அறையில் வைத்து பரிசோதனை செய்வது மற்றும் சிகிச்சைகள் வழங்குவது குறித்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இது தொடர்பாக அகமதாபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை இயக்குனரிடம் விசாரித்த போது மருத்துவமனையின் சிசிடிவியை யாரோ சிலர் ஹேக் செய்து விட்டதாக கூறினார். அதன் பிறகு எப்படி இந்த வீடியோக்கள் வெளியே வந்தது என்பது எங்களுக்கு புரியவில்லை இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் போலீசாரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்போம் என்றும் கூறினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.