
கேரளாவில் சைமா என்ற 19 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில் அரசு போட்டி தேர்வுக்காக தயாராகி வந்தார். இவர் சஜீர் என்ற 25 வயது வாலிபரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் சைமாவின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து கடந்த 3-ம் தேதி நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் வேதனையில் சைமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தன் காதலியின் பிரிவை தாங்க முடியாமல் வாலிபரும் மிகுந்த மன வேதனையில் இருந்தார். இதன் காரணமாக தன்னுடைய கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சஜீர் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார். தொடர்ந்து அவர் ஒரு தோட்டத்துக்கு சென்று மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.