பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக சமீப காலமாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும் மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றத்தை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் பள்ளியில் பாலியல் தொந்தரவு தரும் நபர்கள் மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் பாலியல் சார்ந்த துன்புறுத்தல் இருந்தால் 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.