மத்திய பிரதேசம் மாநிலத்தில் பிச்சை எடுக்கவும், அவர்களுக்கு பணம் கொடுக்கவும் சட்டபூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தூர் நகரில் உள்ள கோவிலுக்கு முன் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அவருக்கு ரூ.10 பிச்சை போட்டுள்ளார். இதை அறிந்த பிச்சைக்கார ஒலிப்புக் குழு, இரு சக்கர வாகனத்தில் சென்றவரை பிடித்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதோடு இந்த வழக்கின் கீழ் அவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம்.

முன்னதாக கடந்த ஜனவரி 23ம் தேதி காண்ட்வா கோவில் அருகே ஒருவர் பிச்சை போட்டதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத முதல் இந்திய நகரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் 600 பிச்சைக்காரர்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பு இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களின்  மறுவாழ்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று 100 சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். அதோடு பிச்சை எடுப்பவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 1000 பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று பிச்சைக்காரர் ஒழிப்பு குழு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.