தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு சுதந்திர தின விழா உரையில் மருந்துகளை பொதுமக்களுக்கு குறைவான விலையில் கிடைக்க செய்வதற்கு முதல்வர் மருந்தகங்கள் திட்டம் அறிவித்தார். அதன்படி 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும். இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் பின்வருமாறு விண்ணப்பிக்கலாம்.

  1. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வமான இணையதளம் www.mutharvarmarunthagam.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். B.pharm/D.pharm சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுந்தவர்களாவர்.
  2. மேலும் மருந்தகம் அமைக்க விரும்புவர்கள் 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். அதற்கான சொத்து வரி, குடிநீர் வரி, மின் இணைப்பு ரசீது, உரிமையான சான்றிதழ்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
  3. மருந்தகம் அமைக்க விரும்பும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ரூபாய் 3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். TABCEDCO,TAHDCO,TAMCO பயனாளிகளும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் தகுதியின் அடிப்படையில், முன்னுரிமை அடிப்படையில் ஏற்கப்படும்.
  4. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு முதல் மானிய தொகை ரூபாய் 1.50 லட்சம் வழங்கப்படும். பின்னர் மருந்தகத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் நிறுவப்பட்ட பிறகு மீதமுள்ள மாநிலம் 1. 50 லட்சம்வழங்கப்படும். மருந்தகங்களின் விற்பனை பொறுத்து ஊக்க தொகைகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.