
சத்தீஸ்கார் மாநிலம் கவர்தா பகுதியில் ‘பைகா’ என்ற பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் பைகா பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் பலர் இன்றுவரையும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பைகா பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர்கள் ஜனாதிபதியுடன் உணவருந்த உள்ளனர். பின்னர் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம், நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி இல்லம் உள்ளிட்ட இடங்களை இவர்கள் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.