
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் திரையரங்கில் வெளியான படம் வணங்கான். இந்த படம் பலதரப்பட்ட விமர்சனங்களுடன் வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தது. அப்போது பாலாவிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை கேட்டனர்.
அதில் ஒரு கேள்வியாக இந்த படத்தின் கதை உண்மை சம்பவமா அல்லது ஏதேனும் செய்திகளில் படித்ததா என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பாலா “இது உண்மை சம்பவம் தான். ஒரு பள்ளியில் நடந்த சம்பவம் இது. ஆனால் அதனை இப்போது என்னால் சொல்ல முடியாது” என பதில் அளித்துள்ளார்.