தமிழக சட்டசபை முதல் நாள் கூட்டத்தொடரின் போது அதிமுக எம்எல்ஏக்கள் யார் அந்த சார் என்று பதாகைகள் ஏந்தி வந்தனர். இதன் காரணமாக சபாநாயகர் அவர்களை அவையை விட்டு வெளியேற்றினார். இந்நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் விதிமுறைகளை மீறிய அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று  சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.

அதாவது இனி இதுபோன்று ஈடுபட மாட்டார்கள் என்று உறுதி அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டு கொண்டார். மேலும் இதனை ஏற்றுக்கொண்டு சபாநாயகர் அதிமுகவினர் மீதான நடவடிக்கை வாபஸ் பெறப்படும் என்று அறிவித்தார்.