கேரளா மாநிலத்தில் உள்ள காஞ்சிரமற்றம் பகுதியில் ஹனீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் முலன்துருத்தி பகுதியில் சாலையோரம் காரை நிறுத்த முயன்ற போது முன்னால் நின்று கொண்டிருந்த சிபு என்பவரது கார் மீது ஹனீப்பின் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் கோபமடைந்த சிபு ஹனீப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கோபத்தில் சிபு ஹனீப்பை ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த ஹனீப் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஹனீப் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.