
போராட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் பாமகவுக்கு ஒரு நீதி.. திமுகவுக்கு ஒரு நீதியா? ஆளுநரை கண்டித்து திமுக நடத்திய போராட்டத்தால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவை அனைத்தையும் தமிழக காவல்துறை மௌனசாட்சியாக இருந்து வேடிக்கை பார்த்திருக்கிறது. தமிழ்நாடு காவல்துறையின் இந்த அப்பாட்டமான இரட்டை வேடம் கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.