
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான மாண்டெனெக்ரோவில் உள்ள சியூன்ஜே நகரில் மதுபான விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் அகோ மாட்டினோ என்ற நபர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் பப் உரிமையாளர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். அது மட்டுமல்லாது அகோ வேறு 3 இடங்களிலும் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் மொத்தம் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிய அகோவை காவல்துறையினர் கண்டுபிடித்து சுற்றி வளைத்துள்ளனர்.
அப்போது அகோ தன்னைத்தானே தலையில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளனர். மொத்தம் மக்கள் தொகை 620,000 கொண்ட சிறிய நாடான இங்கு துப்பாக்கி கலாசாரம் அதிகமாக உள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில் 2 குழந்தைகள் உட்பட 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூட்டினை நடத்திய வரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.