ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் பைக் ஓட்டி வந்த பெண்ணை போக்குவரத்து துறை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளார். அந்த பெண் ஹெல்மட்டும் அணியவில்லை அவரது பைக்கில் நம்பர் பிளேட்டும் இல்லை. இதனால் தடுத்து நிறுத்தப்பட்ட அவரிடம் பெயரை கேட்டபோது பிரபல கார்ட்டூனான சின்-சானில் வரும் சின்-சான் போன்று பேசி “நான் ஷிஞ்சன் நோஹாரா. நீ என் அம்மாவிடம் கேட்கலாம்” எனக் கூறியுள்ளார்.

இது அந்த பதட்டமான சூழலை நகைச்சுவையானதாக மாற்றி இருந்தது. ஆனாலும் போக்குவரத்து துறை போலீசார் சாலை விதிமுறைகளை மதிக்க வேண்டும் என்று கூறி அபராதத்தை செலுத்த சொல்கிறார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் சிலர் அவர் பேசுவதை பார்த்து ஆச்சரியமடைந்தாலும். பலர் பெண்ணின் கவனக்குறைவான செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

https://www.instagram.com/reel/DDeQKW9yNzw