தெற்கு ஆந்திரா, வடதமிழ்நாடு கரையோரம் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.