
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ஒரு ஆணும் பெண்ணும் ஜோடியாக மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளனர், அவர்களை சுற்றி சில மக்கள் கூடியுள்ளனர் அவர்கள் இருவருக்கு இடையேயான தொடர்பை வைத்து தான் இந்த பிரச்சனை நடந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் கட்டப்பட்டிருக்கும் நபர் வழியில் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அதோடு அந்த பெண்ணும் அழுது கொண்டிருக்கிறார். இந்த காணொளி வைரலான நிலையில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.