
தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பார்வையாளர்களாக வந்த ஒரு பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
மைதானத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனை குறிப்பிட்டு மைதானத்தில் இருந்த மிகப்பெரிய திரையில் திரு மற்றும் திருமதி ராபேங்க் உங்களுக்கு ஆரோக்கியமான மகன் பிறந்ததற்கு வாழ்த்துக்கள் என்று திரையிடப்பட்டிருந்தது.