
வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 22ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
அதன் பிறகு நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆந்திராவை நோக்கி நகர்ந்த நிலையில் அடுத்த இரு தினங்களுக்கு வலுப்பெற்று தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்றும் வருகிற 24-ஆம் தேதி டெல்டா பகுதிகளில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.