
கேரள மாநிலத்தில் உள்ள செங்கவேல் பகுதியில் வாகனம் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதே நேரம் செல்போன் பார்த்துக்கொண்டே சாலையில் ஒரு பெண் வந்து கொண்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக அந்த பெண் விபத்திலிருந்து தப்பித்து விட்டார்.
அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விபத்துக்குள்ளான காரில் இருந்த ஒரு நபரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் காரை விட்டு குதித்து அங்கிருந்து தப்பி சென்றார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.