ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அது இந்திய அரசியலை மொத்தமாக மாற்றும் அச்சுறுத்தலுடன் வரும் மசோதா. முக்கிய மசோதாவை நிறைவேற்ற பாரதிய ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனாலும் முக்கிய பிரச்சினைகளை தீர்க்காத பாஜக ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்த முயற்சி செய்கிறது.

மாநில தேர்தல்கள் தங்களது அரசியல் முக்கியத்துவத்தை இதன் மூலம் இழக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாட்டின் ஒற்றை ஆட்சி வடிவத்தை அபாயத்தில் தள்ளும். பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தின் செயல்பாட்டை கொன்றுவிடும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.