
வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் இது இலங்கை மற்றும் தமிழகம் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.