தென்மேற்கு வங்க கடலில் தற்போது பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. பல்வேறு பகுதிகளில் கடன் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சில மருத்துவமனை களுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.

இன்று மாலை புயல் கரையைக் கடக்கும் நிலையில் தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புயலில் முன்பகுதி கரையை கடக்க தொடங்கியது. அடுத்த 3 மணி நேரத்தில் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு அறிவிக்கப்பட்ட அதி கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.