ராஜஸ்தான் மாநிலம் ஜோதப்பூரில் உள்ள மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, ஒரு பெண்ணுக்கு சிசேரியன் பிரசவம் நடந்துள்ளது. அப்போது மருத்துவரின் கவனக்குறைவால், அந்த பெண்ணின் வயிற்றுக்குள் டவலை வைத்து தைத்துள்ளனர். இதனால் அந்த பெண்ணுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் அந்தப் பெண் பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இறுதியாக அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்பொழுது அவரது வயிற்றில் டவல் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். உடனே அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து டவலை அகற்றினர்.

இதுகுறித்து அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் சோனி கூறியதாவது, CT ஸ்கேனில் அவரது வயிற்றில் ஏதோ இருப்பது போல் தெரியவந்தது. அதனால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் கூறினர். சிகிச்சையின் போது அவரது வயிற்றுக்குள் ஒரு துண்டு, அவரது குடலை சுற்றி கிடந்தது. இது மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் வழியை தாங்கிய, அந்த 3 மாதங்களும் அவர் எடுத்துக் கொண்ட மருந்துகளால் அவரது உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் பாதித்துள்ளது என்று கூறினார். அந்தப் பெண் நவம்பர் 15 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 17ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை 5 மணி நேரம் நடத்தப்பட்டது, அதன் பின்பு 8 நாட்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், தற்போது அவர் டிஸ்ட்ரிக்ட் செய்யப்பட்டுள்ளார்.